ஆழிப்பேரலை
அனுகுண்டுவெடிப்பு
எரிமலையின் சீற்றம்
எதுவும்
எம்மை அசைத்ததுவுமில்லை ,
செஞ்சோலை,
புதுக்குடியிருப்பு ,
கொத்துக்குண்டும்-தமிழன்
கொத்துக்கொத்தாய் சாவதுவும்
பள்ளிக்கூடம் நடப்பதெல்லாம்
பதுங்குகுழியில்தான் என்பதுவும்
வெறும் செய்திகள்தாம் எமக்கு,
சாதிக்காரன்
மதத்துக்காரன்-தூரத்து
சொந்தக்காரன் என்பதெல்லாம்
அகன்ற பார்வைகள் எமக்கு ,
தமிழ், தமிழினம் என்றால்
குறுகிய பார்வை என்ற
கூச்சல்போடுவோம்.ஆயுதம்கொடுக்கலாம்
அஹிம்சாதேசம்,இனவெறியரசுதன் மக்களையே அழிக்கலாம்,போரை,
நிறுத்தச்சொல் என்றால்மட்டும்இந்தியநரிகள் - சிங்களத்தில்இறையாண்மை என்று ஊளையிடும்.அது,அயல்நாட்டுவிவகாரம் என்றஅதிகாரக்கும்பலின் உளறல்கேட்டேஊமையாய்க்கிடந்தோம்,உயிர்ப்பலி குறித்தும்
உணர்வற்றும் நாங்கள்
மீளாத்துயிலில் மூழ்கிக்கிடந்தோம்,முத்துக்குமரா,தமிழ்நாட்டுப்பந்தங்களின்
இருலகற்றவா-நீயேதீப்பந்தமானாய்,தமிழினப்பற்றினால்
நீ,தீயைப்பற்றினாய் ,உன் புறம் பற்றிய தீ தமிழகத்தின்
அகம் எரிக்கிறது,நீ ,கரும்புவயலின் இரண்டாம்போகம்,எறிந்தபின்பு துளிர்விட்டாய்,ஆனால்,அறுவடை செய்யத்தான் ஆளில்லை.உன் உயிர்த்தெழுதல் நிஜமாகிப்போனபின்பு இனி,பீனிக்ஸ் பற்றிய கதையாடல்மரித்துப்போகும்,தமிழீழம்,உன் தணியாத தாகம்,நெருப்போடு உறவாடிய நீ,நிச்சயம்
கடலோடு அலையாடி- ஈழகரையோடு கலந்திருப்பாய்.