ஞாயிறு, 29 மார்ச், 2009

ஆதலால்...

தரிசாய்
கிடந்தது மனசு,
உன்
விழியை பதிப்பித்தாய்,

கரடுமுரடு களைந்தாய்,
உவர்நிலத்தில் உரமேற்றினாய்,
இலக்கற்றுத்திரிந்த என்னில்
இலட்சிய விளக்கொன்றை
ஏற்றிவைத்தாய்,

மெல்ல,
என்
வழியை புதுப்பித்தாய் .

செயற்கையின்
சகவாசம் சீரழித்தபோது
இயற்கையின்
சுகவாசம் காட்டினாய்.
ஆம்,
தென்றலோடு
உலவக்கற்றுத்தந்தாய்,
மலர்களோடு
பழகக்கற்றுத்தந்தாய்,
மனங்களோடு
இளகக்கற்றுத்தந்தாய்,
மனிதர்களை
வாசிக்கக்கற்றுத்தந்தாய்,
மனிதத்தை
நேசிக்கக்கற்றுத்தந்தாய்,
வேண்டாமே சாதியென்று
தீண்டாமல் தள்ளிவைத்தாய்,
ஆண்டானடிமைஎன்ற
அவலத்தை நீயோழித்தாய்,
அன்பிலேது உயர்வுதாழ்வென்ற
பவளத்தை நீயளித்தாய்.

தலைகீழ் மாற்றங்கள்
நிகழ்த்திக்காட்டினாய்,
தரணி போற்ற
நிலைத்துக்காட்டினாய்,
ஆதலால்,
காதலே...
நீ....
வாழ்க.