ஞாயிறு, 11 அக்டோபர், 2009

காதலால் கசிந்துருகி...

பிறவிப்பயன்

ஆயிரம்பூக்கள்
மலர்ந்தென்ன பயன் ?
உன்
கூந்தல் ஏறாதுபோனால் !
*****
அமிர்தம்

நீ
எச்சில்படுத்தி
மீதிகொடுத்த அந்த
பாதி சாக்லெட்டின் சுவை !
*****

நீ முத்தமிட்டபோது
என்னுதட்டில்பட்ட
உன் எச்சிலின்
ஈரம் காயாமலிருக்க
எதேனும்
ஒருவழி சொல்லேன் !
*****

உன்,
முகத்தில் பூத்த
வெட்கபூக்களை
பார்க்கவாவது
இன்னொரு
முத்தம் தருவாயா ?
*****

வரமெதுவும் தருவாயா ?
உன்,
தொலைபேசி அழைப்பிற்காக
நொடிதோறும்
தவமிருக்கிறேன் !
*****

என்
பெண்ணை மறந்துவிடு !
அல்லது,
உன்
உயிரை இழந்துவிடு - என்றுகேட்கும்
உன் அப்பாவிடம்
எப்படிச்சொல்வேன்-இரண்டுமே
வேறுவேறல்ல என்பதை !!