தொலைந்தது சனியனென்று
முதியோர் இல்லத்திற்கென்னை
அனுப்பியதுபற்றி
வருத்தமொன்றுமில்லை மகனே,
எனினும்
இதுபற்றிஎன்
பேரனிடமட்டும் சொல்லிவிடாதே !
உனக்குமிங்கே
தாராளமாய் இடமிருப்பதுபற்றி
அவனுக்கும் தெரிந்துவிடப்போகிறது !
*******