சனி, 14 ஆகஸ்ட், 2010

நாடு
அந்நியனுக்கு
அடிமையாய் கிடந்த காலமது
உரிமைக்காக குரல்கொடுத்தால்
குரல்வளை நெரிக்கும் _ வெள்ளைக்கரங்கள்
தடியடி நடத்தும் !

சுதந்திரம்
மலர்ந்து  சிரிக்கிறது !
இப்போதும்,
அப்போதுபோலவே !

எதுவுமே மாறவில்லையா ?
மாறியிருக்கிறதே
தடிபிடித்திருக்கும்
கரங்களின் நிறம் !
_ ஆனந்த சுதந்திரம்.